உக்ரேன் பிரச்சினை பற்றிய நான்கு தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, ரஷியா மீது புதிய தடை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்தது. பேச்சுவார்த்தைக்கு சீரான சூழலை உருவாக்குவதற்கு அமெரிக்காவின் இச்செயல் துணையுரியாது.
18-ஆம் நாள் ரஷிய தேசிய தொலைக்காட்சியின் ஒரு பேச்சுவார்த்தை நிகழ்ச்சியில், ரஷிய அரசுத் தலைவரின் செய்தித்தொடர்பாளர் டிமீட்லி பேஸ்கோவ் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையில், உக்ரேன் அரசு ஆயுத ஆற்றலைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை அடக்கிய செயலுக்காக, அமெரிக்கா பிடிவாதமாக வாதாடியதாகவும், உக்ரேன் நிலைமை மோசமாகி வரும் பொறுப்பை ரஷியா மீது அமெரிக்கா சுமத்தியதாகவும், ரஷிய வெளியுறவு அமைச்சகம் 18-ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஆணித்தரமாக குற்றஞ்சாட்டியது.