சௌதி அரேப்பியாவில், எம் ஈ ஆர் எஸ் நச்சுயிரி தொற்றி, மேலும் இருவர் உயிரிழந்தனர் என்று 22ஆம் நாள் சௌதி அரேப்பிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இதுவரை, சௌதி அரேப்பியாவில் இந்நச்சுயிரியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 81யை எட்டியுள்ளது
இதுவரை, சௌதி அரேப்பியாவில் இந்நச்சுயிரி தொற்றிய மக்களின் எண்ணிக்கை 261. அவர்களில் 81 பேர் இறந்தனர். தொற்றி கொண்டோரில் மூன்றில் ஒருபகுதியினர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சௌதி அரேப்பிய மன்னர் அப்துல்லா, சுகாதார அமைச்சர் அப்துல் அல் ரபீயா பதவியை நீக்கியுள்ளதோடு, தொழிலாளர் அமைச்சர் அடல் ஃபாகியேவை இப்பதவியில் நியமித்துள்ளார்.