• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நடைபெறவிருந்த பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தையை இஸ்ரேல் ரத்து செய்தது
  2014-04-24 09:19:37  cri எழுத்தின் அளவு:  A A A   
பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனமும், காசா பிரதேசத்தைக் கட்டுப்படுத்தும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் ஏப்ரல் 23ஆம் நாள் இணக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளன. வரும் 5 வாரங்களில் கூட்டாக அரசை உருவாக்கி, அதற்கு அடுத்த 6 திங்களில் நாடளாவில் பொதுத் தேர்தலை நடத்த போவதாக பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸ் அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில், 23ஆம் நாள் நடைபெற இருந்த பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தையை இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.

பாலஸ்தீன இருக் குழுக்களுக்கிடை ஏற்பட்டுள்ள இணக்க ஒப்பந்தத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென் ப்சாகி 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தையின் நிலைமையை அது சிக்கலாக்கும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040