உலக இளையோர் குத்துச் சண்டை போட்டி பல்கேரியாவின் சோஃபியா நகரில் நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை நடைபெற்ற 49 கிலோ எடைப் பிரிவினருக்கான அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஷியாம் காகராவும், கஜகஸ்தானின் ஷால்கர் ஏக்னின்பேயும் மோதினர். முதல் சுற்றில் தோல்வியடைந்த காகரா, இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் ஷால்கர் வெற்றி பெற்றார். இதனால் கடினமாக போராடியும் 1-2 என காகரா தோல்வியடைந்தார். இருப்பினும் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அதோடு, இளையோர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.