சர்வதேச பயணியர் விமான அமைப்பின் விதிகளின்படி, எம்எச் 17 விமான விபத்து மீதான புலனாய்வு, உக்ரைன் அரசினால் முக்கியமாக செய்யப்படும்.மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியொ ச்சியுங் லெய் 18ஆம் நாள் இதைத் தெரிவித்தார். அரசுடன் ஒத்துழைத்து விபத்துக்கான புலனாய்வு செய்யவும், புலனாய்வுப் பணியாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யவும், உக்ரைன் கிழக்கு பகுதியின் அரசு சாரா ஆயுதச் சக்தி ஒப்புக் கொண்டுள்ளது.