ரம்மசுன் எனும் இவ்வாண்டின் 9-ஆம் புயல் காற்று, ஜுலை 18ஆம் நாள் மாலை 3.30மணியளவில் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் வென்சாங் மாவட்டத்தில் கரையை கடந்து விட்டது. அதேநாள் இரவு 7.30மணியளவில் குவாங்துங் மாநிலத்தின் சுவென் வட்டத்தில் மீண்டும கரையை கடந்தது. 19ஆம் நாள் காலை 7.10மணியளவில் குவாங்சி தன்னாட்சிப் பிரதேசத்தின் ஃபாங்செங்காங் மாவட்டத்தில் கரையை கடந்து சென்றது. இந்த புயலின் பாதிப்பினால், ஹாய்நான், குவாங்துங் மற்றும் குவாங்சியின் பல பகுதிகளில் கடும் காற்று, கடும் மழை ஏற்பட்டது.
அதைச் சமாளிக்கும் வகையில், தேசிய நிலை அவரச உதவி உடனடியாக துவக்கப்பட்டுள்ளது. பணிக்குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்றுள்ளன.