பிரான்சு அரசுத் தலைவர் பிரான்சுவா ஒலாண்டும், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன்னும் 21-ஆம் நாள் தொலைப்பேசி மூலம், காசா பிரதேசம் மற்றும் இஸ்ரேலின் நிலைமை குறித்து விவாதம் நடத்தினர். காசா பிரதேசத்தில் பொது மக்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஒலாண்டு தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, தொடர்புடைய பல்வேறு தரப்புகள் எகிப்தின் தலைநகர் கைரோவில் போர் நிறுத்தம் குறித்து கலந்தாய்வு நடத்துகின்றன. இதுவரை, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.