உக்ரைன் அரசு இணையத் தளத்தில் வெளியிட்ட தகவல் படி, எம் எச் 17 எனும் மலேசிய பயணி விமான விபத்தில் உயிரிழந்தோருக்கான மீட்புதவிப் பணி ஜூலை 21ஆம் நாள் முழுமையாக முடிந்து விட்டுள்ளது. உயிரிழந்தோரின் பூதவுடல்களை ஏற்றிச்செல்லும் தொடர்வண்டி காயர்காவ் நகருக்குச் சென்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தோரின் பூதவுடல்களை வைக்கும் குளிர்சாதன பெட்டியை டநிட்ஸ்க் குடியரசின் படைவீரர்கள் பாதுகாக்கின்றனர்.