சர்வதேசப் புலனாய்வு பணியாளர்கள் இவ்விடத்தில் பாதுகாப்பாக நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், இந்த இடத்திலிருந்து 40 கிலோமீட்டர் அரைவிட்ட தொலைவுக்குள்ளே போர் நிறுத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உக்ரைன் அரசுத் தலைவர் பெட்ரோ போரோஷென்கோ 21ஆம் நாள் கட்டளை பிறப்பித்தார். அத்துடன், இந்த இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் அரைவிட்ட தொலைவுக்குள்ளே போர் நிறுத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உக்ரைன் அரசு சாரா ஆயுதப் படை அறிவித்தது. உக்ரைன் கிழக்கு பகுதியிலுள்ள ஆயுதப் படையின் ஒத்துழைப்பு குறித்து, ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு நன்றி தெரிவித்தது.