• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீனமும் இஸ்ரேலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த சர்வதேசச் சமூகம் தூண்ட வேண்டும்
  2014-07-24 09:15:34  cri எழுத்தின் அளவு:  A A A   

பாலஸ்தீனமும் இஸ்ரேலும் கட்டுப்பாட்டுடன் செயல்படத் தூண்டும் வகையில், சர்வதேச சமூகம் மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நாவின் ஜெனிவா செயலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள வேறு சர்வதேச அமைப்புகளுக்கான சீனப் பிரநிதிதி வூ ஹாய் லுங் ஜூலை 23ஆம் நாள் ஜெனிவாவில் இவ்வாறு தெரிவித்தார்.

பொது மக்கள் மீதான எவ்வித தாக்குதலையும் சீனா குற்றஞ்சாட்டுகிறது. தற்போதைய பதற்ற நிலைமையைத் தளர்க்க, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன், எகிப்து உள்ளிட்ட பிரதேசங்களும் நாடுகளும், அரபு நாடுகள் லீக் உள்ளிட்ட சர்வதேசச் சமூகமும் மேற்கொண்டுள்ள இணக்க முயற்சிகளைச் சீனா பாராட்டி ஆதரவளிக்கும் என்று வூ ஹாய் லுங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040