சீன-பிரிட்டன் கூட்டறிக்கையின் நடைமுறையாக்கம் குறித்து, புலன் விசாரணை செய்வதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் தூதாண்மை ஆணையம் அறிவித்தது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங்லெய் 25-ஆம் நாள் பேசுகையில், பிரிட்டனின் இச்செயலானது சீன உள்விவகாரத்தில் தலையிட்டது. ஹாங்காங் விவகாரத்தில் மேற்கொண்ட எந்த வடிவிலான தலையீட்டையும் பிரிட்டன் நிறுத்தி, நடைமுறை நடவடிக்கை மூலம் இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியைப் பேணிக்காக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக வர் கூறினார்.
ஹாங்காங், சீனாவின் சிறப்பு நிர்வாக பிரதேசமாகும். ஹாங்காங்கின் விவகாரம், சீனாவின் உள் விவகாரங்களைச் சேர்ந்தது. எந்த வெளி சக்திகளும் ஏதோ ஒரு சாக்குபோக்கில் இதில் தலையிடுவதை சீன அரசு உறுதியாக எதிர்க்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.