முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் பற்றிய சர்வதேச கல்வியியல் ஆய்வுக்கூட்டம், 26-ஆம் நாள் சீனாவின் பெய்சிங்கில் நடைபெற்றது. ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளிலிருந்து வந்த 200க்கு மேற்பட்ட நிபுணர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இரு உலகப் போர்கள், உலக மக்களுக்கு மாபெரும் தீமை ஏற்படுத்தின. இவ்வற்றை மீட்டாய்வு செய்து படிப்பினை மற்றும் அனுபவங்களை தொகுப்பது, உலக அமைதி மற்றும் மனித குலத்தின் கூட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.