அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசிய போது, இவ்விமானம் பறந்து சென்ற பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை, அது விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்க கூடும் என்று கூறினார். மேலும், பத்தாயிரம் மீட்டர் உயரமான வானில் பறக்கும் வானூர்தியைச் சுட்டு வீழ்த்துவதற்கு சிறப்பு சாதனம் தேவை. அப்பகுதியில் இத்தகைய சாதனம் கொண்ட ஆயுததாரிகள் இருப்பதை வெளிப்படுத்தும் தகவல் எதுவும் இல்லை. விமானத்தில் இருந்தவர் இவ்விபத்துக்கு காரணமாவரா என்பதை உறுதிப்படுத்தினால், கருப்பு பெட்டியைப் பகுத்தாராய்ந்து விபத்து நிகழ்விடத்தில் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.