• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசிய விமான விபத்து பற்றிய ஆய்வுப் பணிக்கு பாதிப்பு
  2014-07-27 17:49:39  cri எழுத்தின் அளவு:  A A A   
புதிய தகவலின்படி, மலேசிய எம்எச்17 விமான விபத்தில் உயிரிழந்தோரின் பூதவுடல்கள் அனைத்தும் 26ஆம் நாள் வரை நெதர்லாந்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. பூதவுடல்களை உறுதிப்படுத்தும் பணியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதனிடையில், மலேசிய தலைமை அமைச்சர் நஜீப் துன் ரசாக் அடுத்த வாரம் நெதர்லாந்தில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மலேசிய தரப்பு அறிவித்தது. விபத்து நிகழ்விடத்தில் ஆய்வுப் பணிக்கு உத்தரவாதம் செய்வது பற்றியும், மலேசிய உயிரிழந்தோரின் பூதவுடல்களை உறுதிப்படுத்தும் பணி பற்றியும் அவர் நெதர்லாந்து தலைமை அமைச்சருடன் விவாதம் நடத்துவார்.

உயிரிழந்தோரின் பூதவுடல்களை உறுதிப்படுத்தும் பணி ஒழுங்கு முறையில் நடந்த போதிலும், விபத்து நிகழ்விடத்தில் நடைபெற்று வரும் ஆய்வுப் பணியை டொனேஸ்க் மாநிலத்தின் நிலைமை பாதித்து வருகிறது. தவிரவும், ரஷியா மீது தடை நடவடிக்கையை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. மலேசிய விமான விபத்துக்கு ரஷியா தட்டி கழிக்க முடியாத பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அது கருதுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040