இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அம்மையார் 27-ஆம் நாள் நேபாளப் பயணத்தை முடித்துக்கொண்டார். ஒரு வாரத்துக்கு பின், இந்திய தலைமையமைச்சர் நரந்திர மோடியும் இந்நாட்டில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மோடியின் நேபாளப் பயணத்துக்கு ஆயத்தம் செய்வது சுஷ்மா சுவராஜின் இப்பயணத்தின் நோக்கமாகும். மோடியின் இப்பயணமானது, இந்திய தலைமையமைச்சர் 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காட்மாண்டில் மேற்கொள்ளும் பயணம் என்பது குறிப்பிட்டத்த்க்கது. பயணத்தின்போது, மோடி நேபாளத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்துவார். மேலும், காட்மாண்டின் கிழக்கு பகுதியில் பாசுபாடிணாஸ் எனும் புகழ் பெற்ற ஹிந்து மத கோயிலுக்கு அவர் செல்வார்.