• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்தம் நீடிப்புக்கு பான் கிமூன் வேண்டுகோள்
  2014-07-28 09:07:27  cri எழுத்தின் அளவு:  A A A   
பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய இரு தரப்பும் காசாவில் மனித நேயத்துக்காகப் போர் நிறுத்தத்தை 24 மணி நேரம் நீடிக்க வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் 27ஆம் நாள் செய்தித் தொடர்பாளர் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

இஸ்ரேல் படை காசா பிரதேசத்தில் தங்கி இருந்தால், எந்த போர் நிறுத்த உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று பாலஸ்தீன ஹாமஸ் இயக்கம் 27ஆம் நாள் அதிகாலை தெரிவித்தார். மனித நேய போர் நிறுத்த காலத்தில் ஹாமஸ் இயக்கம், இஸ்ரேல் படை மீது இடைவிடாமல் ராக்கெட்டுக் குண்டுகளைச் செலுத்தியதால், காசா பிரதேசத்தில் ராணுவ தாக்குதலை முழுமையாக மீட்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் தேசியப் பாதுகாப்புப் படை அதே நாள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இதற்கு முன்பு மனித நேயத்துக்காக ஐ.நா முன்வைத்த 12 மணி நேரம் போர் நிறுத்த உடன்படிக்கையை, இவ்விரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. 26ஆம் நாள் காலை 8 முதல் மாலை 8 மணி வரை துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040