இஸ்ரேல் படை காசா பிரதேசத்தில் தங்கி இருந்தால், எந்த போர் நிறுத்த உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று பாலஸ்தீன ஹாமஸ் இயக்கம் 27ஆம் நாள் அதிகாலை தெரிவித்தார். மனித நேய போர் நிறுத்த காலத்தில் ஹாமஸ் இயக்கம், இஸ்ரேல் படை மீது இடைவிடாமல் ராக்கெட்டுக் குண்டுகளைச் செலுத்தியதால், காசா பிரதேசத்தில் ராணுவ தாக்குதலை முழுமையாக மீட்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் தேசியப் பாதுகாப்புப் படை அதே நாள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இதற்கு முன்பு மனித நேயத்துக்காக ஐ.நா முன்வைத்த 12 மணி நேரம் போர் நிறுத்த உடன்படிக்கையை, இவ்விரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. 26ஆம் நாள் காலை 8 முதல் மாலை 8 மணி வரை துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டது.