திபெத்தின் வளர்ச்சி பற்றி அயர்லாந்து நாடாளுமன்ற தூதாண்மை மற்றும் வர்த்தக கூட்டுக் குழுவின் தலைவர் பாத் புரின் இக்கருத்தரங்கில் தமது ஆலோசனையை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
"அயர்லாந்தின் வளர்ச்சி அனுபவத்திலிருந்து திபெத் கற்றுக்கொள்ள வேண்டும். வேளாண் துறையும், சுற்றுலா துறையும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். எடுத்துக்காட்டாக, தன்னிறைவு அடிப்படையில், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய கருத்தில் கொள்ளலாம். திபெத்தின் சுற்றுப்புறத்திலுள்ள நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு இவ்வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். தவிர, திபெத்தில் பண்பாட்டு மற்றும் இயற்கை வளங்கள் மிகவும் அதிகம். உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பயணிகளை ஈர்க்க முடியும்" என்றார் அவர்.
திபெத்தின் வள மற்றும் நிலவியல் மேம்பாடு, இதன் வேளாண் துறை மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு வசதி அளித்துள்ளது. ஆனால், இக்கருத்தரங்கில் திபெத்திற்கு தொழிற்துறை தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இக்கருத்து குறித்து, ஆஸ்திரிய தேசிய பேரவை அரசியல் அமைப்பு சட்டக் குழுத் தலைவர் பீடர் வீட்மன் பேசுகையில், உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்க, இதர பொருளாதார அதிகரிப்பு முறையின் ஆதரவைப் பெற வேண்டும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"ஆஸ்திரேலியாவில் திபெத் போன்ற நிலைமை நிலவுகிறது. சுற்றுலா துறை தவிர்ந்த இதர பொருளாதார அதிகரிப்பு முறையை வளர்க்க வேண்டும். ஆனால் திபெத்தில் இதர பொருளாதார அதிகரிப்பு முறையை கவனமாக தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் திபெத்தின் உயிரின வாழ்க்கை சூழல் பலவீனமானது" என்றார் அவர்.
சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் லொசான் லிங்ச்சிதோஜே இது பற்றி கூறியதாவது:
"உயிரின வாழ்க்கை பொருளாதாரத்தை வளர்த்து, உயிரின வாழ்க்கை வள மேம்பாட்டை, தொழில் மேம்பாடாக மாற்ற வேண்டும். புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பயன்பாட்டை வளர்க்க வேண்டும்" என்றார் அவர்.