நடைபெற உள்ள சிறிய தீவு நாடுகளின் சர்வதேச மாநாடு கூட்டாளி உறவை சிறப்பாகக் கொண்டு, தொடரவல்ல வளர்ச்சி மூலம் சிறிய தீவு நாடுகள் எதிர்நோக்கும் அறைக்கூவலைச் சமாளிப்பது பற்றி அலசி ஆராயும். பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்திற்குப் பொறுப்பான ஐ.நா துணை தலைமைச் செயலாளர் வூ ஹொங் போ ஆகஸ்ட் 20ஆம் நாள் இவ்வாறு தெரிவி்த்தார்.
மூன்றாவது சிறிய தீவு நாடுகளின் சர்வதேச மாநாடு இவ்வாண்டின் செப்டம்பர் முதல் நாள் துவங்கி 4ஆம் நாள் வரை சமோவா எனும் நாட்டில் நடைபெறும்.
2014ஆம் ஆண்டு சிறிய தீவு வளரும் நாடுகள் ஆண்டாகும். ஐ.நாவின் புள்ளிவிபரங்களின்படி, உலகில் மொத்தம் 39 சிறிய தீவு நாடுகள் உள்ளன. அந்த தீவு நாடுகளின் மக்கள் தொகை சுமார் 6 கோடியே 50 இலட்சமாகும்.