ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் அமைதி கடமை-2014 எனும் பயங்கரவாத தடுப்பு இராணுவ கூட்டுப் பயிற்சியை 29-ஆம் நாள் சீனாவின் உள் மங்கோலியாவின் ச்சுரிஹ் பயிற்சி தளத்தில் துவங்கியது. சீன மக்கள் விடுதலை படையின் முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவர் ஃபாங் ஃபொங்ஹுய், கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தாஜிக்ஸ்தான், உக்ரைன் ஆகிய நாடுகளின் முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவர்கள், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைக் கூட்டாளியுறவு நாடுகளின் பிரதிநிதிகள், சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதரங்களின் ஆயுத அதிகாரிகள் ஆகியோர் இப்பயிற்சியை பார்வையிட்டனர்.
போரில் வேவு பார்த்தல் மற்றும் கண்காணிப்பு, கூட்டாக கச்சிதமாக போரிடுதல், சுற்றுப்புறத்திலுள்ள இராணுவ இலக்கை ஒடுக்குதல், நகரப் பகுதியில் பயங்கரவாதிகளை துடைத்தொழித்தல் ஆகியவை இப்பயிற்சியில் இடம்பெறுகின்றன.