2014 சீன-ஆசிய-ஐரோப்பிய பொருட்காட்சி செப்டம்பர் முதல் நாள் மாலை வடமேற்கு சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் துவங்கியுள்ளது.
சீன துணைத் தலைமையமைச்சர் வாங்யாங் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பட்டுப் பாதை கட்டுமானம் குறித்து, அவர் 3 முன்மொழிவுகளை முன்வைத்தார். கொள்கை, வர்த்தகம், நாணயம், போக்குவரத்து, பொது மக்களிடை பரிமாற்றம் ஆகிய 5 துறைகளிலான திறப்பு நனவாக்கினால், பட்டுப்பாதையின் கட்டுமானம் உண்மையாக நனவாகும் என்று அவர் கூறினார். சீன சந்தையைத் திறக்க, சீன அரசு நிபந்தனைகளை உருவாக்கும். அண்டை நாடுகளுடனான முதலீட்டு ஒத்துழைப்பை விரிவாக்க சீனா விரும்புகிறது என்று வாங்யாங் கூறினார்.