சீன மக்கள் குடியரசின் முதலாவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் 28ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. கூட்டத்தொடரில் மாவ்சேத்துங் சீன மக்கள் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சு தே, துணை அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பாட்டார். லியு ஷாவ்ச்சி தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் தலைவராக பதவியேற்றார். சோ என்லேய், அரசவையின் தலைமை அமைச்சராக பதவியேற்றார்.