சீன மக்கள் குடியரசின் 2-வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 28ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. லியு ஷாவ்ச்சி, சீன மக்கள் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பாட்டார். சுங் ச்சிங்லின், துங் பீவூ இருவரும் துணை அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சு தே, 2-வது தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோ என்லேய், அரசவைத் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.