சீன மக்கள் குடியரசின் 3-வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் 1964ஆம் ஆண்டு டிசம்பர் 21 முதல் 1965ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. லியு ஷாவ்ச்சி, சீன மக்கள் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பாட்டார். சுங் ச்சிங்லின், துங் பீவூ இருவரும் துணை அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சு தே, 3-வது தேசிய மக்கள் பேரவையின் நிலைக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோ என்லேய், அரசவைத் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.