சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொள்வார். சிறந்த முதலீட்டுச் சூழலையும் முன்னுரிமையான கொள்கைகளையும் கொண்ட இம்மாநிலம் சீனத் தொழில்நிறுவனங்கள் பலவற்றை ஈர்த்து வருகிறது. ஷிச்சின்பிங்கின் இப்பயணத்தின்போது, சீனாவும் இந்தியாவும் பல பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிடும். ஒரு சீனத் தொழில் பூங்கா குஜராத் மாநிலத்தில் கட்டியமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக சீனத் தொழில்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும். இரு நாட்டுறவின் முன்னேற்றம் ஷிச்சின்பிங் மற்றும் மோடி காலத்தில் நுழைந்துள்ளது. இரு நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பும் மேலும் முன்னேற்றமடையும் என்று இந்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங்கின் பயணத்தின்போது, இரு நாடுகள் பல பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிடும். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு சீனத் தொழில் பூங்காக்களைக் கட்டியமைப்பது அவற்றில் ஒரு முக்கியமான அம்சமாகும். அப்போது, மேலதிக சீனத் தொழில்நிறுவனங்கள் இந்தியாவில் நுழையும். தொழில் பூங்காவின் மொத்த முதலீட்டுத் தொகை 500கோடி அமெரிக்க டாலரைத் தாண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது.