• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குஜராத் சென்றடைந்துள்ள ஷி ச்சின்பிங்
  2014-09-17 21:36:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் சென்றடைந்து இந்தியாவில் அரசு முறை பயணத்தைத் துவக்கினார்.


அன்று மாலை, ஷிச்சின்பிங்கின் சிறப்பு விமானம் ஆமதாபாத் விமான நிலையத்துக்குச் சென்றடைந்தது. குஜராத் மாநிலத்தின் ஆளுநர் ஓம் ப்ரகாஷ் கொரி, முதல்வர் அனன்டிபென் பாடெல் அம்மையார், சீனாவுக்கான இந்திய தூதர் அசொக் கான்டா முதலியோர், விமான நிலையத்தில் ஷி ச்சின்பிங் தம்பதிகளை வரவேற்றனர்.

ஷி ச்சின்பங், இந்திய மக்களுக்கு சீன மக்களின் மனமார்ந்த ஆறுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். சீன-இந்திய நட்பான தொடர்பு, பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. புதிய நூற்றாண்டில், சீனாவும் இந்தியாவும் 2 மிக பெரிய வளரும் நாடுகளாகவும் புதிய வளர்ச்சி பெற்ற நாடுகளாகவும் மாறியுள்ளன. அவை, உலக பல துருவமயமாக்கத்திலான 2 முக்கிய ஆற்றலாக மாறியுள்ளன.

இந்தியாவுடன் கைகோர்த்து மேலும் நெருக்கமான வளர்ச்சிக் கூட்டாளியுறவை உருவாக்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட பிறகு, ஷி ச்சின்பிங் புது தில்லிக்கு போவார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040