ஷிச்சின்பிங் பேசுகையில், சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கிய அண்டை நாடாகவும், பழம்பெரும் நாகரிக சிறப்பு வாய்ந்த நாடுகளாகவும் பெரிய வளரும் நாடுகளாகவும் திகழ்கின்றன. இருநாடுகளும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, ஒன்றை ஒன்று கற்றுக் கொண்டு, ஒன்றுடன் ஒன்று நட்பார்ந்து பழகி, கூட்டாக முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.