சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் 18ஆம் நாள் வியாழக்கிழமை புதுதில்லியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இரு நாடுகளுக்கிடையே உள்ள மேலும் நெருக்கமான வளர்ச்சிக் கூட்டாளியுறவை அமைக்கவும், வாய்ப்புகளைப் பயன்படுத்தி தத்தமது வளர்ச்சிக் குறிக்கோள்களை அடையவும், சர்வதேச ஒழுங்குமுறையை மேலும் நேர்மையான நியாயமான திசைக்கு முன்னேற்றவும், இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. பேச்சுவார்த்தையில் ஷி ச்சின்பிங் பேசுகையில், அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் இணக்கமான சகவாழ்வும் அமைதியான வளர்ச்சியும் அமைவது, இரு நாடுகளின் 250கோடி மக்கள் தொகைக்கு நன்மை பயக்கும். பல பரந்த வளரும் நாடுகளுக்கும் பிரதேச மற்றும் உலகிற்கும் ஆழ்ந்த செல்வாக்கை அது ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
திபெத் தன்னாட்சி பிரதேசம், சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாகும். திபெத் இன மக்கள் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கையை இந்தியா அனுமதிக்காது. மேலும், சீனாவுடன் இணைந்து முயற்சிகளை செய்து, எல்லைப் பகுதியின் சர்ச்சையை கட்டுப்படுத்தி, எல்லைப் பிரச்சினைப் பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்தி, இதற்கு வெகுவிரைவில் தீர்வு காண இந்தியா விரும்புவதாக, மோடி தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஷி ச்சின்பிங்கும் நரேந்திர மோடியும், பொருளாதாரம் வர்த்தகம், நாணயம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.