கடந்த 40 ஆண்டுகளில் உலகளவில் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை பாதியளவில் குறைந்துள்ளது. இலண்டன் விலங்கு உயிரியல் கழகம் செப்டம்பர் 30ஆம் நாள் புதிதாக வெளியிட்ட புவி உயிரின குறியீடு என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கையில் இந்த ஆய்வு முடிவு கிடைத்தது. காட்டு விலங்குகளை காக்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மனிதர்களின் செயல்கள் , உயிரினங்களின் பல்வகை பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.