இது குறித்து அந்நாட்டு ஊடக அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடர்பாளருமான கேலியா ராம்புகவெல்லா கூறுகையில், தேர்தல் நடைபெற உள்ள தேதி தெரியும். ஆனால், அது உறுதி செய்யப்பட்ட பின்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இத்தேர்தலில், மதம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளாமல், நாட்டின் நலனை உறுதி செய்யும் வகையில் மக்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜனவரி 8 அல்லது 9ஆம் தேதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.