முதலாவது "பட்டுப்பாதை நண்பர்கள்" பேச்சுவார்த்தை 20ஆம் நாள் சீனாவின் நான்ஜிங் நகரில் தொடங்கியது. அரபு நாடுகளின் வளைகுடா ஒத்துழைப்பு ஆணையத்தைச் சேர்ந்த 6 நாடுகள் மற்றும் சீனாவின் அரசு அலுவலர்கள், தூதாண்மை அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.
சீனாவும் வளைகுடா ஒத்துழைப்பு ஆணையத்தைச் சேர்ந்த நாடுகளும் பண்டைகாலத்தின் பட்டுப்பாதையின் எழுச்சியைப் பின்பற்றி பரவல் செய்வதோடு, அதற்கு புதிய உள்ளடக்கத்தையும் ஊட்ட வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறையின் துணை அமைச்சர் லீ ஜின்ஜுன் கூறினார்.