எபோலா நோய் தடுப்பு பற்றிய பலதரப்பு நம்பிக்கை நிதியம் மூலம் ஐ.நா. 5 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நன்கொடை வாக்குறுதியை பெற்றுள்ளது என்று அதன் தலைமை செயலர் பான் கீ மூன் தன்னுடைய செய்திதொடர்பாளரின் மூலம் அறிக்கையை வெளியிட்டார். பல்வேறு தரப்புகள், இந்நிதியத்துக்கு தொடர்ந்து நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த திங்களில், எபோலா நோய் தடுப்பு பற்றிய பலதரப்பு நம்பிக்கை நிதியத்தை, ஐ.நா. உருவாக்கியது. எபோலா நோய் தடுப்புக்காக, 100 கோடி அமெரிக்க டாலரைத் திரட்ட ஐ.நா. திட்டமிட்டுள்ளது.