செவ்வாய் கிரகத்தில் 68 நாட்களுக்கு மட்டுமே மனிதர்கள் வாழ்வதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு குடிபெயர்வதில் ஆவல்மிக்கவர்களுக்கு இந்த புதிய ஆய்வு முடிவு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். ஆக்ஸிஜன் எனும் வாயு பற்றாக்குறை என்பது இந்த கிரகத்தில் தங்கும்போது எதிர்கொள்ளப்படும் மிக பெரிய அறைகூவல் ஆகும்.
புவியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு இடமாறி மனிதர்கள் அங்கே நிரந்தரமாக வசிக்கும் முன்பே, புதிய தொழில் நுட்பம் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
நெதர்லாந்து நாட்டில் லாப நோக்கம் இல்லாத அமைப்பு ஒன்று, செவ்வாய் கிரகத்திற்கு குடிபெயரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி இத்திட்டத்தில் சேர்பவர்கள் 2024ஆம் ஆண்டு இருக்கும்போது இக்கிரகத்தில் நிரந்தரமாக வாழ்வார்கள். இதுவரை உலகளவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ளனர்.