கனடாவின் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 23ஆம் நாள் காலை 10 மணிக்கு, கனடாவின் நாடாளுமன்ற மாளிகையில் பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் சுடும் ஒலி எழுந்தது. இதனையடுத்து காவற்துறை உடனடியாக அம்மாளிகையை முற்றுகையிட்டது.
கனடாவின் தலைமை அமைச்சர் ஸ்டேஃபென் ஹார்பரின் செய்தித்தொடர்பாளர் ட்விட்டர் எனும் சமூக இணையத் தளத்தில் இத்தகவலை உறுதிப்படுத்தினார். தலைமை அமைச்சர் ஹார்பர் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலிருந்து வெளியேறியுள்ளார்.