தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் குடிமகனை வட கொரியா அண்மையில் விடுவித்தது. ஆனால் இருநாட்டுறவை மேம்படுத்துவதற்கு இது வாய்ப்பு அல்ல என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாரியெ ஹார்ஃப் அம்மையார் 22ஆம் நாள் தெரிவித்தார். அதேவேளை, கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மைக்காக வட கொரியா ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர் ஜேப்ரெய் எட்வார்ட் பாவ்லெயை வட கொரியா விடுவித்துள்ளதை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் 21ஆம் நாள் உறுதிப்படுத்தியது. ஆனால் மேலும் இரு அமெரிக்கர்கள் அந்நாட்டின் தடுப்புக் காவலில் இருக்கின்றனர்.