பாகிஸ்தானில் தற்கொலை தன்மை வாய்ந்த தாக்குதல்
2014-10-24 09:34:05 cri எழுத்தின் அளவு: A A A
பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாநிலத்தின் தலைநகர் குய்தா நகரில் வியாழக்கிழமை இரவில் தற்கொலை தன்மை வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது.
ஓர் இஸ்லாமிய மதச்சங்கத்தின் தலைவர் மாவ்லானா ஃபசால்-ராஹ்மன் மதக் கூட்டத்துக்குச் சென்ற வழியில் தாக்கப்பட்டார். தூப்பாக்கிகுண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்த ராஹ்மன் பாதுகாப்பாக உள்ளார். ஆனால், வேறு இருவர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயமடைந்தனர்.
அன்று முற்பகல் இந்நகரில் வேறு ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. பயணியர் பேருந்து ஒன்று அடையாளம் தெரியாதவரால் தாக்கப்பட்டது. தாக்குதலில் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுவரை எந்த தனிநபரும் அமைப்பும் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய