ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியைக் கட்டியமைப்பது பற்றி 21 நாடுகளின் பிரதிநிதிகள் 24ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் ஒன்றுகூடி வங்கையக் கட்டியமைப்பது தொடர்பான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். சீனாவின் முன்மொழிவின் படி ஆசிய பிரதேசத்தில் புதிய பலதரப்பு வளர்ச்சி நிறுவனமான இவ்வங்கியின் கட்டுமானம் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதையே இது காட்டுகின்றது.
வங்காளதேசம், புரூனய், கம்போதியா, சீனா, இந்தியா, கசகஸ்தான், குவெய்த், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மர், நேபாளம், ஓமான், பாகிஸ்தான். பிலிப்பைன்ஸ், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, உஸ்பேகிஸ்தான், வியட்நாம் ஆகியவை இவ்வங்கியின் கட்டுமானம் தொடர்பான குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளன.