• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய உள் விவகார அமைச்சர் இஸ்ரேலில் பயணம்
  2014-10-24 16:41:32  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த திங்களில் இஸ்ரேலில் பயணம் மேற்கொள்வார் என்று தகவல் அக்டோபர் 24ஆம் நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டுறவினை மேம்படுத்துவது, அவரது பயணத்தின் நோக்கமாகும். ராஜ்நாத் சிங், இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் நவம்பர் 6ஆம் நாள் சந்தித்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 14 ஆண்டுகளில், இந்திய உள் துறை அமைச்சர் ஒருவர் இஸ்ரேலில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040