ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையை நவம்பர் 24ஆம் நாளுக்கு முன் உருவாக்கும் வகையில், பல்வேறு தரப்புகளும் பகுத்தறிவுடன் இப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையை காலத்தாமதமின்றி முன்னேற்ற வேண்டும் என்று அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் வேன்டி ஷேர்மன் 23ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார். தொலைநோக்கு மற்றும் சர்வதேச பிரச்சினை ஆய்வகத்தில் உரை நிகழ்த்திய போது அவர் இதைத் தெரிவித்தார்.
செறிந்த யுரேனிய அளவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பல்வேறு தரப்புகளுக்கிடையில் கருத்துவேற்றுமை நிலவுகிறது. இது குறித்த சர்ச்சையை தீர்க்க ஈரான் உண்மையாக விரும்பினால், அதற்கான நல்ல வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.