ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான இஸ்தான்புல் செயல்முறை தொடர்பான 4ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அக்டோபர் 31ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தலைமை அமைச்சர் லீ க்கெ ச்சீயாங்கும் ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் கானியும் இதில் கலந்துகொண்டனர்.
ஆப்கானிஸ்தான் பிரச்சினையத் தீர்ப்பது பற்றிய சீனாவின் 5 கருத்துக்களைச் லீ க்கெ ச்சியாங் உரைநிகழ்த்தியபோது கூறினார். அதாவது, ஆப்கானிஸ்தான் மக்கள் தான் நாட்டை நிர்வகிக்க வேண்டும், அரசியல் நல்லிணக்கத்தைத் தூண்டுவது, பொருளாதாரப் புனரமைப்பை விரைவுப்படுத்துவது, வளர்ச்சிப் பாதையை ஆராய்ச்சி செய்வது, வெளிநாட்டு ஆதரவை வலுப்படுத்துவது ஆகியவை என்பதாகும்.