• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான இஸ்தான்புல் செயல்முறை தொடர்பான 4ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
  2014-10-31 16:18:29  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான இஸ்தான்புல் செயல்முறை தொடர்பான 4ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அக்டோபர் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 14 உறுப்பு நாடுகள், ஆதரவு அளிக்கும் 16 வெளிநாடுகள், 12 சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகள், கூட்டத்திற்குத் தலைமை பதவி வகிக்கும் 4 நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உயர்நிலை பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

ஆப்கானிஸ்தானுக்கான நட்புப்பூர்வக் கொள்கைகளைச் சீனா தொடர்ந்து மேற்கொள்ளும். அத்துடன், ஆப்கானிஸ்தானின் அமைதி நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு போக்குக்குச் சீனா ஆதரவு அளித்து வருகிறது என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அஹ்மத் ஒஸ்மனி இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினர்.

இக்கூட்டம் பெய்ஜிங் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, 6 துறைகளிலுள்ள 64 ஒத்துழைப்பு திட்டப்பணிகளை உறுதி செய்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040