ஆசிய-பசிபிக் இளைஞர்களின் பொறுப்பு என்ற தலைப்பிலான 2014ஆம் ஆண்டின் ஏபெக் எதிர்கால குரல் என்னும் இளைஞர் முகாமின் துவக்க விழா மற்றும் இளைஞர் முன்னோடிகளின் கருத்தரங்கு நவம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கின. ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 116 இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
இளைஞர்களின் உயிராற்றல் மற்றும் அறிவுத்திறமை, உலக வளர்ச்சியின் நம்பி்க்கை சுடராகும். இளைஞர் பிரதிநிதிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, பரிமாற்றம் செய்து, பார்வையை விரிவுபடுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ தெரிவித்தார்.