20 நாடுகள் குழுவின் 9ஆவது உச்சிமாநாடு ஆஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர், பிரிஸ்பேன் குளோபல் காஃப் எனும் பரிமாற்ற நடவடிக்கை நவம்பர் 12 மற்றும் 13ஆம் நாள் நடைபெற்றுள்ளது. அறிஞர்கள், நிபுணர்கள் மட்டுமல்லாமல், ஆர்வமுடைய தனிநபரும் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளனர். சர்வதேசச் சமூக மனிதகுலத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, அறிவியலை முழுமையாக்குவது உள்பட ஜி 20 உச்சிமாநாட்டில் இல்லாத அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்தக் குளோபல் காஃப் சர்வதேச அளவில் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.