பொருளாதார அதிகரிப்பைத் தூண்டுவதற்கான கொள்கையை நடைமுறைப்படுத்த 20 நாடுகள் குழு வாக்குறுதி அளிப்பதை சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிரிஸ்டீன் லாகார்த் அம்மையார் 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வரவேற்பு தெரிவித்தார். இக்கொள்கையைச் செயல்படுத்துவது முக்கியமாக இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகளின் முயற்சிகள், பாராட்டத்தக்கவை. உலகப் பொருளாதார அதிகரிப்பை விரைவுபடுத்துவதற்கு இது குறிப்பிடத்தக்க பயனுள்ளது. இக்கொள்கையைச் செயல்படுத்துவது தற்போதைய முக்கிய பணியாகும் என்று லாகார்த் அம்மையார் அறிக்கையில் தெரிவித்தார்.