சீன அரசு தலைவர் ஷி ச்சின் பீங் 17ஆம் நாள் கான்பெராவில் ஆஸ்திரேலியாவின் தலைமை ஆளுநர் கொஸ்க்ரோவைச் சந்தித்துரையாடினார்.
சீன-ஆஸ்திரேலிய இரு தரப்புறவை, பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இரு நாட்டுத் தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையைப் பயனுள்ள வகையில் முடித்திருப்பது, இரு நாடுகளுக்கிடையேயான நட்பு ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது என்று ஷி ச்சின் பீங் தெரிவித்தார்.