சீனாவின் 24வது இலக்க தொலை உணர்வறிச் செயற்கைக்கோள், லாங்மார்ச்-2தி ஏவூர்தி மூலம், நவம்பர் 20ஆம் நாள் சீனாவின் ஜியூசுவான் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டு, தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளது. அறிவியல் பரிசோதனை, நிலம் மற்றும் மூலவள கணக்கெடுப்பு, இயற்கை சீற்றத் தடுப்பு முதலிய துறைகளில் இந்தச் செயற்கைக்கோள் பங்காற்றும்.