ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் இணக்கப் போக்கை உறுதியாகத் தூண்ட வேண்டும். இதற்கு சர்வதேசச் சமூகம் பயனுள்ள உதவிகள் அளிக்க வேண்டும் என்று ஐ.நாவிலுள்ள சீனாவின் துணை நிரந்தர பிரதிநிதி வாங் மின் நவம்பர் 20ஆம் நாள் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அதன் அண்டை நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தி, பிரதேச பாதுகாப்பைத் தூண்டி, பிரதேச ஒத்துழைப்புகளில் சேர்வதைச் சீனா உறுதியாக ஆதரிக்கிறது. பட்டுப் பாதைப் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானத்தில் ஆப்கானிஸ்தான் ஆக்கத்துடன் கலந்துகொள்வதைச் சீனா வரவேற்கிறது என்றும் வாங் மின் கூறினார்.