ஃபிஜி நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அந்நாட்டுத் தலைவர் அமைச்சர் பேனிமாரமாவும் 22ஆம் நாள் சனிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு தரப்பு பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் அதிகரிக்கவும் இரு நாட்டுறவை மேலும் வளர்க்கவும், ஃபிஜியுடன் இணைந்து முயற்சிகளை எடுக்க சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை தரம் மேம்பாடு ஆகிய நோக்கத்திற்காக, சீனா எப்போதும் ஃபிஜிக்கு உதவி அளித்து வருகிறது. மேலும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், சீனா அதற்கு ஆதரவு மற்றும் உதவயைத் தொடர்ந்து வழங்கும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, அரசுகளிடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.