• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரதேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்த சார்க் மாநாட்டில் உறுதி
  2014-11-27 15:50:57  cri எழுத்தின் அளவு:  A A A   

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 2 நாள்கள் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில், சார்க் நாடுகளின் வளர்ச்சிக்கு உள்ள தடைகளை களைவது குறித்தும், உறுப்பு நாடுகள் வர்த்தகம் உள்ளிட்டவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பு அளித்து சிறந்த முன்னேற்றத்தை எட்டவும் விவாதிக்கப்பட்டது.

2 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு புதன்கிழமை தொடங்கியது.

இம்மாநாட்டில் 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பிரதேச வளர்ச்சி குறித்து உரை நிகழ்த்தினர்.

2006ஆம் ஆண்டிலிருந்து சார்க் அமைப்பின் பார்வையாளராக சீனா உள்ளது. இந்த மாநாட்டில் பார்வையாளாரக சீனா கலந்து கொண்டது.

தெற்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கும், அந்நாடுகளுக்கிடையேயான நீடித்த வலுவான உறவை எதிர்காலத்திலும் தொடரவும் உறுதி பூண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

பிரேதசத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமானது 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 30 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் சீனாவின் தரப்பில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லியூ ஸென்மிம் தெரிவித்தார். தெற்காசிய நாடுகளுக்கு சீனா வழங்கிய உதவிகள் குறித்தும் ஸென்மிம் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040