முதலாவது எபோலா நோய் தடுப்பூசி, மருத்துவச் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இத்தடுப்பூசி, பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பது சோதனையில் உறுதிசெயப்பட்டது என்று அமெரிக்காவின் மத்திய சுகாதார கழகம் 26ஆம் நாள் அறிவித்துள்ளது.
இந்த ஆய்வுச் சாதனை பற்றி அமெரிக்காவின் மருத்துவவியல் இதழ் ஒன்றில் வெளியானது.
இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு நிலை குறித்து மேலதிக சோதனைகள் எதிர்காலத்தில் அமெரிக்காவிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் நடத்தப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது. ஆனால், குறுகிய காலத்தில், அதன் உற்பத்தி அளவு, தேவையை நிறைவு செய்யமுடியாது என்பது தெரிகிறது.