இந்தோனேசிய நிதி அமைச்சர் பன்ம்பாங் பரோஜோநேகோரோ அரசின் சார்பாக ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் உருவாக்கக் குறிப்பாணையில் 25ஆம் நாள் ஜகார்த்தாவில் கையொப்பமிட்டார். இதுவரை, சீனா, இந்தியா, வங்காளத்தேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்பட 22நாடுகள் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் உருவாக்கத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளதாக 27ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் கையொப்பப் பணிகளை பல்வேறு நாடுகள் 2015ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றி திட்டமிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.